தமிழ்க் கடவுள் முருகன் வரலாறு !! கோவில்கள்தமிழ்க் கடவுள் முருகன் வரலாறு !!முந்தைய வரலாறு வரலாறு அரசியல் வரலாறு தமிழர் பண்பாடு தமிழ் மொழி தகவல்கள் தமிழீழ நடைமுறை அரசு

 


எங்கே வரலாறு மவுனம் சாதிக்கத் தொடங்குகிறதோ  அங்கே இடப்பெயர்களும்,  ஊர்ப்பெயர்களும் தம் வாய் திறந்து


எங்கே வரலாறு மவுனம் சாதிக்கத் தொடங்குகிறதோ  அங்கே இடப்பெயர்களும்,  ஊர்ப்பெயர்களும் தம் வாய் திறந்து பேசத் தொடங்கும்.’

எல்.வி. இராமசாமி, இந்திய மொழியியலாளர் (L.V. Ramaswami, Indian linguist)

மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப்பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும் போது அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது பழமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு. ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. வரலாறுகள் மௌனமாகும்போது இடப்பெயர்கள் வாய் திறந்து பேசக்கூடும்.

அந்த வகையில் முந்து-தமிழர்களின் நாகரிகம் எப்படி இருந்தது என்பதற்கான சான்றுகள் பாகிசுதான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் இரவி ஆற்றங்கரையிலுள்ள அரப்பாவிலும், அங்கிருந்து 400 கி.மீ. தொலைவில் சிந்து ஆற்றங்கரையிலுள்ள மொகஞ்சதாரோ என்ற இடத்திலும், முப்பதாயிரம் மக்கள் வாழ்ந்ததற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கொண்ட ஊர்கள் அப்படியே மண்ணுக்குள் புதைந்த நிலையில், கடந்த நூற்றாண்டில் நமக்கு கிடைத்துள்ளன. அதற்கு வலுசேர்க்கும் விதமாக ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராகவும், வளர்ச்சி ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், அம்மாநிலத்தின் சிறப்புத் தலைமை ஆலோசகர் பொறுப்பிலுள்ளவருமான ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்களின் சிந்துவெளியில் அமைந்துள்ள ஊர்கள், மலைகளின் பெயர்கள், சங்க தமிழ் இலக்கியங்களிலுள்ள பெயர்களை இன்றளவும் தாங்கி நிற்கிறது என்ற அவரின் சிந்துவெளி மற்றும் அரப்பாவில் “கொற்கை-வஞ்சி-தொண்டி” ஆய்வு மேலும் வலுசேர்க்கிறது.

புலப் பெயர்வுகளும் – ஊர்ப் பெயர்களும்

நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள், புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில் ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.

சிந்துவெளி நாகரிகம் குறித்த தமிழர் நாகரீக கருதுகோளுக்கு வலு சேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ் [Allchins], சங்காலியா [Sangalia], அஸ்கோ பர்ப்போலா [Asko Parpola], ஐராவதம் மகாதேவன் [Iravatham Mahadevan] மற்றும் எப்.சி. சவுத் வொர்த் [F. C. Southworth] போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். அரப்பாவின் மொழியைக் கண்டறிய அரப்பா இடப்பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பின்லாந்து எல்சின்கி பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.

புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கின்ற, நிகழ்கின்ற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.

சிந்துவெளி மக்களுக்கும், சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும், வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.

சிந்துவெளியில் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் சங்க கால பெயர்கள்

பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை, வஞ்சி, தொண்டி, மதுரை, உறையூர், கூடல், கோழி, பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை, தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல், வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, அரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள்.

சிந்துவெளி கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு, சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar), தோட்டி(Toti), தோன்றி (Tonri), ஈழம் (Illam), கச்சி (Kachi), காக்கை (Kakai), கானம் (Kanam), களார் (Kalar), கொங் (Kong), நாலை (Nalai), நேரி (Neri) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர், தோட்டி, ஈழம், கச்சி, காக்கை, கானம், கழாஅர், கொங்கு, நாலை,நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

ஆறுகள், மலைகளின் பெயர்கள்

ஆறுகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கானிஸ்தானில் உள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி, ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி, கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பஃறுளியாற்றின் பெயரையும், வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.

தொல்லியல் சான்றுகள்

பூம்புகார் வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்.

பூம்புகார் – 11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம். ********************************************** பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது


Sponsor Key-Word

(Copy and Paste Below Content to Your Every Post Bottom of the Description Page)

"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

Sponsor Key-Word

(Copy and Paste Below Content to Your Every Post Bottom of the Description Page)

"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

Sponsor Key-Word

(Copy and Paste Below Content to Your Every Post Bottom of the Description Page)

"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

Comments

Popular posts from this blog

Tamil language imapten part off legacy on the topics ,tamil books in schooll life in best reading

Healthy food live long better life of juney the great life a buttyfull

people saying Khichdi is the national food of India s Khichdi the National Food of India