the golden need for achiyatheruthi in india celebreat indians calcher
அட்சய திருதியை ( Akshaya Tritiya) என அறியப்படுவது இந்துக்கள், சமணர்களின் வசந்தகால கொண்டாட்டம் ஆகும். இது இந்து மாதமான வைசாக வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். மேலும், இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை என்றால் என்ன? சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நாளன்று, தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு. அக்ஷய திருதியை, அக தீஜ் என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்து வேதங்களின்படி ஒரு மங்களகரமான நாளாகும். பண்டிகை நாளில், விஷ்ணு, விநாயகர் மற்றும் லட்சுமி தேவி ஆகியோர் வழிபடப்படுகிறார்கள். அக்ஷய திருதியை, அகா தீஜ், அக்தி அல்லது பரசுராம ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது , இது இந்து மதம் மற்றும் சமண மதத்தைப் பின்பற்றுபவர்களால் கொண்டாடப்படும் ஒரு மிகவு...